“தாயார் மீது பாட்டிலை வீசினார், காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தினார், தைலாபுரத்தில் 6 அடியாட்களை வைத்துள்ளார்...” என அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணியும், சவுமியாவும் எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்காவிட்டால், நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி கூறினார்” என்றார்.