திங்கள் , மார்ச் 03 2025
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் உடல் எடை குறித்து விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று (மார்ச் 3) முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது இல்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான மாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
“பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் நிலவ வேண்டும். தமிழ்நாட்டில் தேவையான எண்ணிக்கையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்து நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். மேலும், பலத்த பாதுகாப்புடன் பயணம் சென்ற மோடி, சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
நீட் ரகசியத்தை மு.க. ஸ்டாலினும் உதயநிதியும் உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால் திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு என குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) ஊழியர்களின் உடல்நலம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2023 ஜூலை மற்றும் 2024 ஜூலைக்கு இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் பணிபுரியும் 345 ஊழியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 80 சதவீதம் பேருக்கு மெட்டபாலிக் டிஸ்பங்சன்-அசோசியேட்டடு பேட்டி லிவர் டிசீஸ் (எம்ஏஎப்எல்டி) கல்லீரல் கொழுப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் பருவமழை தீவிரமாக இருக்கும். அதேநேரம், தமிழகத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.