Short news

‘‘தாமரைக்கு வாக்களிப்பேன்’’ - பெண்ணின் கன்னத்தில் அறைந்த காங். வேட்பாளர்

தெலங்கானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் நிர்வாகி டி.ஜீவன் ரெட்டி. காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிடுகிறார். இவர் பிரச்சாரத்தின்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் ‘கை’ சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது ஒரு பெண், “நான் தாமரை சின்னத்தில் தான் வாக்களிப்பேன்” என்று தைரியமாக கூறியுள்ளார். இதனை கேட்டு ஜீவன் ரெட்டி ஆத்திரம் அடைந்து அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

x