Short news

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரணம்

நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், “எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என புகார் அளித்திருக்கிறார். இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

x