‘‘துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சி பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதிகள் விவகாரத்தைக் கையாள்வதில் கடந்த காங்கிரஸ் ஆட்சி பலவீனமாக இருந்ததாக விமர்சித்த பிரதமர் மோடி, ‘‘கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் காதல் கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அதற்கு இணையாக தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டிருந்தது’’ எனக் கூறியுள்ளார்.