Short news

சிறப்பு வகுப்புகள்: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

‘‘கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், ‘‘கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x