Published : 03 Jun 2014 12:00 AM
Last Updated : 03 Jun 2014 12:00 AM

ஆஸ்திரேலியாவில் தீக்குளித்த இலங்கை தமிழர் சாவு

ஆஸ்திரேலியாவில் தீக்குளித்த இலங்கை தமிழ் அகதி லியோர் சின் சீமான்பிள்ளை (29) உயிரிழந்தார். மீண்டும் இலங்கைக்குத் திரும்ப அனுப்பப்பட்டால் பெரும் அபாயத்தை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் கடந்த சனிக் கிழமை அவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் அவர் தீக்காயங்கள் மிகவும் மோசமாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று ஆஸ்தி ரேலிய அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீமான்பிள்ளை கடல்வழியாக கடந்த ஜனவரியில் இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி ஆஸ்திரேலியா வந்தார். அவருக்கு முதலில் தற்காலிக விசா வழங்கப் பட்டது.

எனினும் அவருக்கு அளிக்கப் பட்ட புகலிடம் நிராகரிக்கப்பட்டு விரைவில் இலங்கைக்கு திரும்ப அனுபப்படுவார் என்று கூறப்பட்டது. இதனால் அச்சமடைந்த சீமான்பிள்ளை தீக்குளித்து உயிரிழந்தார். அவரது சாவுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள்தான் காரணம் என்று தமிழ் அகதிகள் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் மயில்வாகனம் குற்றம் சாட்டியுள்ளார்.

எனக்கு 13 மாதங்களாக சீமான்பிள்ளையைத் தெரியும். சீமான்பிள்ளை தீக்குளித்து இறந்ததால் இந்தியாவில் அகதியாக உள்ள அவரது பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இலங்கைக்கு திரும்ப அனுப் பப்பட்டு விடுவோம் என்ற பயத்திலேயே அவர் உயிரை விட்டுள் ளார். சொந்த விருப்பத்தின் பேரில் செல்கிறேன் என்று கூறி இலங்கைக்கு திரும்பச் சென்றுவிடுமாறு ஆஸ்திரேலிய அதிகாரிகள் அவரை துன்புறுத்தியுள்ளனர் என்றும் மயில் வாகனம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x