Published : 29 Dec 2021 06:00 AM
Last Updated : 29 Dec 2021 06:00 AM
புக்கர் பரிசு வென்ற நியூசிலாந்து எழுத்தாளர் கெரி ஹுல்ம் (74) நேற்று முன்தினம் காலமானார்.
நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ள வெய்மேட் நகரில் 27-ம் தேதி காலையில் கெரி காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் இறப்புக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
தெற்கு தீவின் கிறிஸ்ட்சர்ச் நகரில் தச்சு வேலை செய்த வில்லியம் ஹுல்ம், மேரி தம்பதிக்கு 6-வது மகளாக பிறந்தார் கெரி. இவர் 11 வயதிலேயே தந்தையை இழந்தார். சிறு வயதிலேயே கவிதை, சிறுகதைகள் எழுதுவதில்ஆர்வமாக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த கெரி, கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால், படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பின்னர் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். 1984-ம் ஆண்டில் கெரி எழுதிய ‘தி போன் பீப்புள்’ என்ற நாவலுக்கு மேன் புக்கர் பரிசு கிடைத்தது. 20 ஆண்டு கால முயற்சிக்குப் பின் இந்த நாவலை எழுதினார். முதலில் இவரது நாவலை வெளியிட பல்வேறு பதிப்பகத்தார் மறுத்துவிட்டனர். பின்னர் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஸ்பைரல் என்ற சிறு பதிப்பகம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT