Published : 29 Jun 2017 09:49 AM
Last Updated : 29 Jun 2017 09:49 AM
சிரியாவின் அல்-மயாதின் பகுதியில் அமெரிக்க கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஐ.எஸ். தீவிரவாத முகாம்களை அழிக்க அமெரிக்க கூட்டுப்படை வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 26-ம் தேதி அமெரிக்க கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதல் களில் 42 பொதுமக்களும் 15 ஐ.எஸ். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT