Published : 31 Oct 2025 12:19 PM
Last Updated : 31 Oct 2025 12:19 PM

​பாக். ராணுவ தாக்​குதல்: பலுசிஸ்​தானில் 18 போராளி​கள் உயி​ரிழப்பு

கராச்சி: பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் அந்​நாட்டு ராணுவ தாக்​குதலில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர்.

உளவுத் தகவலின் அடிப்​படை​யில் பலுசிஸ்​தானின் குவெட்டா மாவட்​டம், சில்​டன் மலைத்​தொடரிலும், கெச் மாவட்​டத்​தின் புலே​டா​விலும் பாகிஸ்​தான் ராணுவம் புதன்​கிழமை இரவு தேடு​தல் பணி மேற்​கொண்​டது.

இதில் ராணுவத்​தினர் - பலுசிஸ்​தான் போராளி​கள் இடையே கடும் துப்​பாக்​கிச் சண்டை ஏற்​பட்​டது. இதில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர். அங்​கிருந்து ஆயுதங்​கள், வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​ன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x