Published : 31 Oct 2025 11:39 AM
Last Updated : 31 Oct 2025 11:39 AM
ஜியுகுவான்: பூமியில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலைவில் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் (தியான்காங்) செயல்படுகிறது. இதுகுறித்து சீன விண்வெளித் துறை செய்தித் தொடர்பாளர் ஜாங் ஜிங்போ கூறியதாவது:
சீன விண்வெளி வீரர்கள் ஜாங் லு, வூ பெய், ஜாங் ஹாங் ஜாங் ஆகியோர் வெள்ளிக்கிழமை (இன்று) பூமியில் இருந்து தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு புறப்படுகின்றனர்.
சீனாவின் நிலவுப் பயண திட்டம் கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கியது. கடந்த 2007-ம் ஆண்டில் நிலவுக்கு ரோபோவை அனுப்பினோம். கடந்த 2020-ம் ஆண்டில் நிலவில் இருந்து 1.7 கிலோ பாறை, மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தோம். அடுத்த கட்டமாக வரும் 2030-ம் ஆண்டில் நிலவில் சீன வீரர்கள் கால் பதிப்பார்கள். இவ்வாறு ஜாங் ஜிங்போ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT