Published : 09 Oct 2025 02:52 AM
Last Updated : 09 Oct 2025 02:52 AM
யாங்கூன்: மியான்மரில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியை விரட்டி விட்டு, கடந்த 2021-ம் ஆண்டு நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மத்திய மியான்மரில் உள்ள சவுங் யூ நகரில் புத்த மதத்தினர் ஏராளமானோர் கூடி விழா கொண்டாடினர். அப்போது புத்த மதத்தினர் கூடியிருந்த பகுதிகளில் ராணுவத்தினர் பாராகிளைடர் மூலம் அடுத்தடுத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக ராணுவத்தினர் குண்டு வீசப் போகும் தகவல் கிடைத்து ஏராளமானோர் உயிர் பிழைத்துள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT