Published : 10 Sep 2025 07:08 AM
Last Updated : 10 Sep 2025 07:08 AM

இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் குடியேறும் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை சமீப கால​மாக அதி​கரித்து வரு​கிறது. அங்கு குடியேறிய வெளி​நாட்​ட​வர்​களில் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யர்​கள் 2-ம் இடத்​தில் உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்​கெடுப்​பின்​படி 8.4 லட்​சம் இந்​தி​யர்​கள் அங்கு வசிக்​கின்​றனர். இதுத​விர, ஆயிரக்​கணக்​கானோர் ஆஸ்​திரேலி​யா​விலேயே பிறந்து குடி​யுரிமை பெற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களுக்கு எதி​ரான மனநிலை அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, கடந்த சில வாரங்​களாக வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறு​வதற்கு எதி​ராக, நாடு முழு​வதும் ‘மார்ச் பார் ஆஸ்​திரேலி​யா' என்ற பெயரில் பேரணி மற்​றும் போராட்​டம் நடை​பெற்று வரு​கிறது.

வெளி​நாட்​டினரின் வரு​கை​யால் விலை​வாசி உயர்ந்​து​விட்​ட​தாக பேரணி​யில் பங்​கேற்​றவர்​கள் குற்​றம் சாட்டி உள்​ளனர். இதனால் இது​வரை இந்​தி​யர்​களுக்கு நேரடி​யாக எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. ஆனாலும் அரசின் குடியேற்ற கொள்​கை​களில் ஏதாவது மாற்​றம் வருமோ என இந்​தி​யர்​கள் கலக்​கமடைந்​துள்​ளனர்.

இந்த சூழலில், ஆஸ்​திரேலி​யா​வின் சுதந்​திர கட்​சி​யின் செனட் உறுப்​பினர் ஜசிந்தா நம்​பிஜின்பா பிரைஸ், சமீபத்​தில் வானொலி ஒன்​றுக்கு பேட்டி அளித்​தார். அதில், “பிரதமர் அந்​தோனி அல்​பானீஸ் தலை​மையி​லான தொழிலா​ளர் கட்சி வாக்கு வங்​கிக்​காக இந்​தி​யர்​களை அதிக அளவில் குடியேற அனு​ம​திக்​கிறது’’ என கூறி​யிருந்​தார்.

இவரது இந்​தக் கருத்து ஆஸ்​திரேலிய வாழ் இந்​தி​யர்​கள் மத்​தி​யில் கோபத்தை ஏற்​படுத்தி உள்​ளது. இந்த விவ​காரத்​தில் ஜசிந்தா மன்​னிப்பு கோர வேண்​டும் என அவருடைய கட்​சி​யினர் உட்பட பலர் வலி​யுறுத்தி உள்​ளனர். இதுகுறித்து ஆஸ்​திரேலிய பிரதமர் அந்​தோனி அல்​பானீஸ் கூறும்​போது, “ஜசிந்தா தெரி​வித்த கருத்​தில் உண்மை இல்​லை. அவருடைய கருத்து இந்​தி​யர்​களை வெகு​வாக பாதித்​துள்​ளது. இதற்​காக அவர் மன்​னிப்பு கோர வேண்​டும்’’ என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x