Published : 05 Sep 2025 06:54 AM
Last Updated : 05 Sep 2025 06:54 AM
அபுஜா: மேற்கு ஆப்பிரிக்காவின் முக்கிய நதியான நைஜர், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் வழியாக பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. இந்நிலையில் நைஜீரியாவின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு பகுதியில் இந்த ஆற்றில் சுமார் 90 பேருடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. இந்தப் படகு நேற்று காலையில் ஒரு மரத்தின் அடிப்பகுதியில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 32 பேர் பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர், 8 பேரை காணவில்லை. நைஜீரியாவின் தொலைதூரப் பகுதிகளில் மழைக்காலங்களில் படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. படகுகள் பராமரிப்பின்மை மற்றும் அதிக சுமை காரணமாக விபத்துகள் நிகழ்கின்றன. நைஜீரியாவின் வடமேற்கு சோகோட்டோ மாநிலத்தில் கடந்த மாதம் ஒரு ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 25 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT