Published : 03 Sep 2025 08:19 AM
Last Updated : 03 Sep 2025 08:19 AM

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,423 ஆக உயர்வு

காபூல்: கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது.

ஜலாலா​பாத் அரு​கில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கத்​தால் குனார் மாகாணம் மிக கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. இங்கு பெரும்​பாலான வீடு​கள், மண், பாறை​களை கொண்டு கட்​டப்​பட்​டிருந்​த​தால், நிலநடுக்​கத்தை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் அவை இடிந்து விழுந்​தன. பாதிக்​கப்​பட்ட இடங்​களில் உள்​ளூர் மக்​கள் உதவி​யுடன் மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் நிலநடுக்​கத்​தால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை குனார் மாகாணத்​தில் 1,411 பேர், நங்​கர்​கர் மாகாணத்​தில் 12 பேர் என 1,423 ஆக உயர்ந்​துள்​ளது. காயமடைந்​தோர் எண்​ணிக்கை இரு மாகாணங்​களி​லும் சுமார் 3,500 ஆக உயர்ந்​துள்​ளது.

குணார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணைய தலை​வர் கூறுகை​யில், “தொலை​தூர கிராமங்​களில் காயம் அடைந்​தவர்​களை மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வரு​கிறோம். சாலைகள் சேதம் அடைந்​துள்​ள​தால் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட இன்​னும் சில கிராமங்களுக்கு எங்களால் செல்ல முடியவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x