Published : 24 Aug 2025 02:36 PM
Last Updated : 24 Aug 2025 02:36 PM
புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வர இருப்பதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழ்ந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடியுடன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி கூறும்போது, மோதல்களுக்கு தூதரக ரீதியில் பேச்சுவாரத்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் கூறும்பொது, “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியா வர இருக்கிறார். ஜெலென்ஸ்கியின் பயணத் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது போர் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள். உக்ரைன் அதிபரின் இந்திய பயணம் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT