Published : 24 Aug 2025 10:43 AM
Last Updated : 24 Aug 2025 10:43 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஏப்ரல் 30 முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதேபோல, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்.24 வரை நீட்டித்துள்ளது. இது குறித்த தகவல் விமானிகளுக்கான அறிவிப்பில் (NOTAM) தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT