Published : 08 Aug 2025 06:50 AM
Last Updated : 08 Aug 2025 06:50 AM

இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் இந்​தாண்டு இந்​தியா வரு​கிறார் என மாஸ்​கோ​வில் அளித்த பேட்​டி​யில் இந்​தி​யா​வின் தேசிய பாதுகாப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறி​யுள்​ளார். இந்​தியா - ரஷ்யா இடையே ராணுவ உறவு​களை விரி​வாக்​கும் நோக்​கில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்யா சென்​றுள்​ளார்.

அவர் அதிபர் புதினை நேற்று சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்தி​னார். அதன்​பின் அவர் இன்​டர்ஃபேக்ஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில்,” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தாண்டு இந்​தியா வரு​கிறார் ” என கூறி​னார்.

ரஷ்யா - உக்​ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் ஏற்​பட்ட பின் ரஷ்ய அதிபர் புதின் முதல் முறை​யாக இந்​தியா வரவுள்ளார். கடந்​தாண்டு ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி இரு முறை சந்​தித்​தார். கடந்​தாண்டு ஜூலை மாதம் இந்​தியா - ரஷ்யா இடையே​யான 22-வது ஆண்டு கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி ரஷ்யா சென்​றார்.

இது பிரதமர் மோடி 3-வது முறை​யாக பதவி​யேற்​றபின் முதல் முறை​யாக ரஷ்​யா​வுக்கு சென்ற பயண​மாகும். அப்​போது பிரதமர் மோடிக்கு ரஷ்​யா​வின் உயர்ந்த விரு​தான ‘ஆர்​டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு தி அபோஸ்​டில்’ விருது அளித்து கவுரவிக்​கப்​பட்​டது. இந்​தியா - ரஷ்யா இடைய​யான உறவை வலுப்​படுத்த பிரதமர் மோடி மேற்​கொண்ட முயற்​சிகளை பாராட்டி இந்த விருது அளிக்கப்​பட்​டது.

அதன்​பின் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க ரஷ்​யா​வின் காசன் நகருக்கு கடந்​தாண்டு அக்​டோபர் மாதம் பிரதமர் மோடி சென்​றார். அப்​போதும் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்​தித்​தார். தற்​போது ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்​டுள்​ளார்.

அதோடு, உக்​ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்​தா​விடில், அந்​நாட்​டிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கும் நாடு​கள் மீது இரண்டாம் கட்ட பொருளா​தார தடை விதிக்​கப்​படும் எனவும் அதிபர் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின், இந்​தியா வரு​கிறார் என்ற அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது.

ரஷ்யா - உக்​ரைன் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படு​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு இன்​றுடன் முடிவடைகிறது. இந் நிலை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்​தித்து பேசி​னார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்​டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்​புவ​தாக அவர் அதிபர் புதினிடம் தெரிவித்​தார்.

இந்​நிலை​யில் ரஷ்​யா​வின் கிரெம்​ளின் மாளிகை வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், அதிபர் புதின், விரை​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது என தெரி​வித்​துள்​ளது. இதை ரஷ்ய வெளி​யுறவுத்​துறை ஆலோ​சகர் யூரி உஷாகோ​வும் உறுதி செய்​துள்​ளார். இந்த சந்​திப்​பிற்​கான இடம், ஏற்​பாடு​கள்​ குறித்​த அறி​விப்​பு விரை​வில்​ அறிவிக்​கப்​படும்​ என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x