Published : 01 Aug 2025 04:54 AM
Last Updated : 01 Aug 2025 04:54 AM

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணை மீட்ட 7 தமிழர்களுக்கு விருந்து அளிக்கிறார் அதிபர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த ஒரு பெண்ணை பத்திரமாக மீட்ட 7 தமிழர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர், வரும் 3-ம் தேதி விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் கட்டோங் சாலையின் ஒரு பகுதி கடந்த ஜூலை 26-ம் தேதி திடீரென உள்வாங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கார் அந்த பள்ளத்துக்குள் விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் அந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்துள்ளனர். சகதியாக இருந்த அந்த பள்ளத்தில் ஒரு பெண் காரிலிருந்து வெளியில் வந்துள்ளார்.

இதையடுத்​து, அவரை மீட்​கும் முயற்​சி​யில் அவர்​கள் ஈடு​பட்​டனர். இதன் ஒரு பகு​தி​யாக, ஒரு நைலான் கயிறை விட்டு அந்​தப் பெண்ணை பத்​திர​மாக மீட்​டனர்.

இந்​நிலை​யில், அந்​தப் பெண்ணை மீட்ட தமிழர்​களுக்கு பாராட்டு குவிந்து வரு​கிறது. இதனிடையே, அந்த 7 பேருக்​கும் பாராட்டு தெரி​வித்​துள்ள அந்​நாட்டு அதிபர் தர்​மன் சண்​முகரத்​தினம், வரும் 3-ம் தேதி தன்னை நேரில் வந்து சந்​திக்​கு​மாறு அழைப்பு விடுத்​துள்​ளார். அப்​போது 7 பேருடன் அதிபர் உரை​யாடு​
வதுடன் அவர்​களுக்கு விருந்து அளிக்கவும் திட்​ட​மிட்​டுள்​ளார்.

பிச்சை உடையப்பன் சுப்பையா (47), வேல்முருகன் முத்துசாமி (27), பூமாலை சரவணன் (28), கணேசன் வீரசேகர் (32), போஸ் அஜித் குமார் (26), நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25) மற்றும் சாத்தபிள்ளை ராஜேந்திரன் (56) ஆகியோர்தான் அந்தப் பெண்ணை மீட்டனர்.

இதனிடையே, அந்த 7 பேருக்​கும் 1,639 பேர் 72,241 சிங்​கப்​பூர் டாலரை பரி​சாக வழங்கி உள்​ளனர் என அங்​குள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்​கான தொண்டு நிறு​வனத்​தின் முகநூல் பக்​கத்​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x