Published : 30 Jun 2025 06:30 AM
Last Updated : 30 Jun 2025 06:30 AM
இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கைபர் பக்துன்குவா பகுதியில் நேற்று முன்தினம் ராணுவத்தினரின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவற்றின் மீது வெடிகுண்டுகள் ஏற்றிவந்த வாகனம் மோதியதில் பாக். ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு தெக்ரிக் - இ-தலிபான் என்ற பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தற்கொலைப்படை பிரிவான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்பேற்றது. ஆனால், பாகிஸ்தானின் ராணுவம் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தியாவின் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், வெடிகுண்டு வாகனத்தை ராணுவத்தினர் வாகனங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர்’’ என தெரிவித்துள்ளது.
இந்தியா மறுப்பு: இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், ‘‘வசிரிஸ்தானில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இதை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம்’’ என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT