Published : 14 Jun 2025 12:02 AM
Last Updated : 14 Jun 2025 12:02 AM

ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிப்பு: சரமாரியாக தாக்கிய இஸ்ரேல் விமான படை - முழு விவரம்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த ராணுவ குடியிருப்பு. படம்: ஏஎப்பி

தெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப்​படை நேற்று சரமாரி​யாக குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தில், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​கள் அழிக்​கப்​பட்​டன. இந்த​தாக்​குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்​ஞானிகள், 3 ராணுவ தளப​தி​கள் உயி​ரிழந்​தனர்.

அணுஆ​யுதம் தயாரிக்க பயன்​படும் மூலப்​பொருளான யுரேனி​யம்,ஈரானிடம் சுமார் 275 கிலோ வரை இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இந்த யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. சுமார் 90 சதவீதம் அளவுக்கு இதை செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​ தயாரிக்க முடி​யும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்​டங்​கள் தொடர்​பாக அந்த நாட்​டுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இது​வரை 5 கட்ட பேச்​சு​ நடத்தியும், எந்தஉடன்​பாடும் எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், ஈரானின் அணுசக்தி தளங்​கள், ராணுவ தளங்​கள் மற்​றும் அணுசக்தி விஞ்​ஞானிகள், ராணுவ தளப​தி​களின் இருப்​பிடங்​களை குறி​வைத்து இஸ்​ரேல் விமானப்​படை நேற்று அதி​காலை 3.30 மணி அளவில் திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. 200-க்​கும் மேற்​பட்ட போர்விமானங்​கள், நூற்​றுக்​கணக்​கான ட்ரோன்​கள் மூலம் ஈரான் முழு​வதும்குண்​டு​கள் வீசப்​பட்டன. ஈரானின் இஸ்ஃப​கான் மாகாணம் நடான்ஸ் நகரில் அந்த நாட்​டின் மிகப்​பெரிய அணுசக்தி தளம்
உள்​ளது. பூமிக்கு அடி​யில் சுமார் 80 மீட்​டர் ஆழத்​தில் செயல்​படும் இந்த தளத்​தில் 9 அணுகுண்​டு​களை தயாரிக்க இறு​தி​கட்ட பணி​கள் நடந்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த தளத்தை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள் பூமியை துளைத்து தாக்​கும் அதிநவீன குண்​டு​களை வீசின. இதில், பூமிக்கு அடி​யில் செயல்​பட்ட அணுசக்தி ஆலை​யின் 26 தளங்​களும் கடுமை​யாக சேதமடைந்​தன.

ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃப​கான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்​நுட்ப மையம், மர்​காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகிய​வை​யும் இஸ்​ரேலின் தாக்​குதலில் தகர்த்து அழிக்​கப்​பட்​டன. இந்த தாக்​குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்​ஞானிகள் அப்​துல் ஹமீது, அகமதுர​சா, சையது அமீர்​உசைன், மோட்​லாபி​சாடே, முகமது மெஹ​தி, அப்​பாஸி ஆகிய 6 பேர் உயி​ரிழந்​த​தாக கூறப்​படு​கிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்​டத்​துக்கு பெரும் பின்​னடை​வாக அமைந்​துள்​ளது.

ஈரானின் கிழக்கு அஜர்​பைஜான் மாகாண தலைநகர் தப்​ரீஸில் உள்ள ராணுவ முகாமில் அதிநவீன ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. ஈரான் ராணுவத்​தின் மிகப்​பெரிய எண்​ணெய் சுத்​திகரிப்பு மைய​மும் அங்கு உள்​ளது. இஸ்​ரேல் போர் விமானங்​களின் குண்டு மழை​யில் இவை அனைத்​தும் அழிக்​கப்​பட்​டன. இராக் எல்​லையை ஒட்டி கெர்​மான்ஷா நகரில் உள்ள ராணுவ முகாம், ஆயுத உற்​பத்தி ஆலைகளும் பெரிதும் சேதமடைந்​தன.

2-வது தாக்குதல்: தலைநகர் தெஹ்​ரானில் உள்ள ராணுவ குடி​யிருப்​பு​கள் மீது இஸ்​ரேல் ட்ரோன்​கள் துல்​லிய தாக்​குதல் நடத்​தி​ய​தில், ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்​லாமிக் புரட்சி காவல் படை​யின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்​பியா என்ற ஈரான் போர் கட்​டளை தலை​மையகத்​தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலில் 20-க்​கும் மேற்​பட்ட மூத்தராணுவ அதி​காரி​கள் உயி​ரிழந்​ததாகவும், 100-க்கும்​ மேற்பட்​ட வீரர்​கள்​ காயமடைந்​ததாகவும்​ சில தகவல்​கள்​ தெரி​விக்​கின்​றன. இந்நிலையில் ஈரானின் மேற்கு தெஹ்ரான், கராஜ் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 2-வது தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.

இஸ்ரேலுக்கு பதிலடி; கொமேனி எச்சரிக்கை: இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் நேற்று 100 ட்ரோன்களை அனுப்பியது. அவை அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, ‘‘ஈரான் அணுகுண்டு தயாரித்தால், இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும். இதை தடுக்கவே அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. ‘ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வலைதள பதிவில், ‘தற்போதைய சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கினார். அப்போது இந்தியாவின் கவலையை எடுத்துரைத்தேன். மத்திய கிழக்கில் அமைதி, ஸ்திரத்தன்மையை விரைந்து ஏற்படுத்த வலியுறுத்தினேன்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ‘ஈரான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு மிக கடுமையான, வேதனை அளிக்கும் பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரான் மத தலைவர் அலி கொமேனி எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x