Last Updated : 19 May, 2025 10:06 AM

1  

Published : 19 May 2025 10:06 AM
Last Updated : 19 May 2025 10:06 AM

இந்தியாவில் 3 பெரிய தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

சைஃபுல்லாவிடம் வெளியே செல்வதை குறைக்குமாறு லஷ்கர் அமைப்பு அவருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று மாட்லி நகரில் உள்ள தனது வீட்டை விட்டு சைஃபுல்லா வெளியே வந்தபோது, ​​சில மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் (ஐஎஸ்சி) தாக்குதல், 2006ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீதான தாக்குதல் மற்றும் 2008ஆம் ஆண்டு ராம்பூரில் நடந்த சிஆர்பிஎஃப் முகாம் தாக்குதல் ஆகிய மூன்று மிகப்பெரிய தாக்குதல்களில் சைஃபுல்லா ஒரு முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

மூன்று வருட இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். இவை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நேபாளத்தில் வினோத் குமார் என்ற புனைப்பெயரில் பல ஆண்டுகள் சைஃபுல்லா வசித்து வந்தார், அங்கு அவர் உள்ளூர் பெண்ணான நக்மா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் தான், அவர் தனது முகாமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பாடின் மாவட்டத்தில் உள்ள மாட்லிக்கு மாற்றினார். அங்கு, பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் முன்னணி அமைப்பான ஜமாத்-உத்-தாவா ஆகியவற்றுக்காக தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x