Published : 10 May 2025 09:51 AM
Last Updated : 10 May 2025 09:51 AM

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்கம்: கண்ணீர் விட்ட பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் தாஹிர் இக்பால். தற்போது பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவராகவும் எம்.பி.யாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தொடங்கிய போது, கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசினார்.

தாஹிர் இக்பால் பேசும் போது, ‘‘இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை ராணுவம் காப்பாற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து எம்.பி.க்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஓ அல்லா. உமக்கு முன்னால் நாங்கள் தலைவணங்கி நிற்கிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்று’’ என்று உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடியே பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x