Published : 03 Mar 2025 04:48 AM
Last Updated : 03 Mar 2025 04:48 AM

அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது.

அமெரிக்​கா​வின் பயர்​பிளை ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்​கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்​பியது. இது சுமார் ஒரு மாதமாக பூமி​யின் சுற்று​வட்​டப்​பாதை​யில் பயணம் செய்​தது. பின்னர் நிலவின் சுற்று​வட்டப்பாதையை அடைந்​தது. 16 நாட்கள் பயணத்​துக்​குப் பிறகு புளு கோஸ்ட் விண்​கலம் நிலவின் மாரே கிரிசி​யூம் பகுதி​யில் நேற்று அதிகாலை 3.34-க்கு (அமெரிக்க நேரம்) வெற்றிகரமாக தரையிறக்​கப்​பட்​டது.

டெக்​சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள இந்த திட்​டத்​தின் கட்டுப்​பாட்டு மைய பொறி​யாளர் இதை உறுதி செய்​துள்ளார். இதன்​மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய 2-வது தனியார் திட்டம் என்ற பெருமை கிடைத்​துள்ளது. நிலவில் கால்​ப​தித்த இந்த விண்​கலம், நிலவின் தரைப்​பரப்பை படம்​பிடித்து அனுப்பி உள்ளது. அதில் அதன் கால்​தடம் பதிவாகி உள்ளது. இந்த விண்​கலத்​தில் மண் பகுப்​பாய்வி, கதிர்​வீச்சு சகிப்புத்​தன்மை கொண்ட கணினி உள்ளிட்ட 10 கருவிகள் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்ளன. இந்த விண்​கலம்ஒரு நிலவு நாள் முழு​வதும் (14 பூமி நாட்​கள்) இயங்​கும் வகையில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. வரும் மார்ச் 14-ம் தேதி சூரிய ஒளியை பூமி மறைக்​கும்​போது உயர் திறன் கொண்ட புகைப்​படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்கான செலவைக் குறைப்​ப​தற்காக அமெரிக்க விண்​வெளிஆராய்ச்சி மையம் (நாசா) தனியார் நிறு​வனத்​துடன் இணைந்து செயல்பட ​திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தியாக இந்த ​விண்​கலம் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x