Published : 04 Nov 2022 06:10 AM
Last Updated : 04 Nov 2022 06:10 AM

ப்ரீமியம்
ஆறாம் வகுப்பிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் எனும் சிறகு முளைக்கட்டும்!

ஆர். உதயலஷ்மி

மழை அதிகமாக பெய்து கொண்டிருப்பதால், எங்கள் பகுதி கால்வாய்களில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது. நீங்க வாங்க டீச்சர், நாமெல்லாம் ஆனந்தமாக தண்ணீரில் விளையாடலாம் என்று அழைத்தார்கள் பத்தாம் வகுப்பு மாணவிகள். ஆசிரியர் பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் நெருக்கமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களின் சுற்றுப்புறச்சூழல், சமுதாய அமைப்பு, பெற்றோரின் மனப்பாங்கு, மாணவர்களுக்கு சூழலில் அமைந்துள்ள வாய்ப்புகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள

அவ்வப்போது மாணவர் வாழும் பகுதிகளுக்கு செல்வதுண்டு. நீரில் விளையாட அழைத்த மாணவியரை சந்திக்க அவர்கள் ஊருக்குச் சென்றேன். எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ளது அவர்களுடைய ஊர். பத்தாம் வகுப்பு மாணவியரின் பெற்றோரிடம் குழந்தைகள் படிப்பதற்கான நேரத்தை தர வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவு சமைத்து தாருங்கள் என்று பேசிவிட்டு, வேகமாக பாய்ந்து செல்லும் கால்வாய் நீரில் விளையாடி மகிழ்ந்தோம். நீண்ட நேரம் மாணவியரோடு விளையாடிக் கொண்டிருந்ததில், மாணவியர் ஆசிரியர் என்ற எண்ணத்தை மறந்து சகதோழியாகப் பேசத் தொடங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x