Published : 28 Oct 2022 06:09 AM
Last Updated : 28 Oct 2022 06:09 AM

ப்ரீமியம்
வெற்றி நூலகம்: சோசோவை சந்தியுங்கள், எதிர்பாராமல் உங்களைச் சந்திப்பீர்கள்

ம. பரிமளா தேவி

சிறார் எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சோசோ வின் விசித்திர வாழ்க்கை” சிறார் நாவல் ஓங்கில் கூட்டம் வெளியீடாக வந்துள்ளது. இந்நாவலில் கதாபாத்திரங்களுக்குப் பெயர்களே இல்லை. எல்லோருக்கும் ஓரே பெயர்தான். சமூகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி குணங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணங்களைக் கொண்டிருப்பர். அவர்களை வித்தியாசப்படுத்த பெயர்கள் தேவையில்லை. பல குணங்களைக் கொண்ட ஒருவனும் இருப்பான். அந்த ஒருவன்தான் சோசோ.

சோசோ வீட்டின் வாழைமரத்தில் ஒரு செவ்வாழைக் குலை வளர்ந்து வந்தது. அதைப் பார்த்ததும் சோசோவுக்கு ஒரு யோசனை. மனைவி, குழந்தைகள் சேர்ந்து நூறு பழங்களை சாப்பிட முடியாது. மற்றவர்களுக்கு ஏன் இலவசமாகக் கொடுக்க வேண்டும்? ஒருபழம் பத்து ரூபாய் என்றாலும் நூறு பழம் இருக்கு. ஆயிரம் ரூபாய் கைக்கு கிடைக்கும். அதை வைத்துஒரு மாததிற்கான மளிகைப்பொருட்களை வாங்கிவிடலாம் என்று நினைத்து வாழைத்தாரை சந்தைக்குஎடுத்துச் செல்கிறான். அங்கு ஒரு ஏஜெண்ட் வருகிறான். நான் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு விற்றுத் தருகிறேன். ஆனால், எனக்கு கமிசன் வேண்டும் என்கிறான். சோசோவும் சம்மதிக்கின்றான். வழியில்இன்னொரு ஏஜெண்ட் வருகிறான். வியாபாரியை நான் காட்டுகிறேன். ஆனால், எனக்கு கமிசன் வேண்டும் என்கிறான். கடைக்குச் சென்று முதலாளியிடம் பேசி இறுதியில் ஐநூறு ரூபாய்க்கு விற்கிறான். முதலாளி நூறு ரூபாய் கடைக்குக் அழைத்த வந்து ஏஜெண்ட்டுக்கு கொடுக்க வேண்டுமென்று எடுத்துக் கொள்கிறான். மீதம் உள்ள பணத்தை இரண்டு ஏஜெண்ட்களும் எடுத்துக் கொள்கின்றனா். இறுதியாக பார்க்க பாவமாக இருக்கிறது என்று அதில் ஒருவன் இருபது ரூபாயை சோசோவுக்கு கொடுக்கிறான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x