Published : 27 Oct 2022 06:12 AM
Last Updated : 27 Oct 2022 06:12 AM

ப்ரீமியம்
எஸ்.ஆர்.வி. பள்ளியின் மகேந்திரன் திரைப்படச் சங்கம் மாணவர்கள் தரமான படங்களை பார்க்க வழிகாட்டுகிறது

முருகானந்த் குமரேசன்

பிலிம் அப்ரிசியேஷன் பள்ளிகளில் பாடமாக்கப்பட வேண்டும் என்று மறைந்த திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா கூறி வந்தார். தமிழ் சினிமாக்களை மட்டும் தொடர்ந்து பார்த்து வரும் மாணவர்கள் சினிமா என்கிற கலையை அதன் ஆற்றலை உணரக்கூடிய வாய்ப்பைப் பெறுவதில்லை. அதனால்தான் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி “மகேந்திரன் திரைப்படச் சங்கம்” என்ற ஒன்றை உருவாக்கி, மாணவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள நல்ல திரைப்படங்களை மாதந்தோறும் திரையிட்டு கலந்துரையாடல்களை நிகழ்த்தி வருகிறது.

வீடு, உறவுகள் தாண்டி ஒரு குழந்தைக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தருவது பள்ளிக்கூடங்கள்தான். இங்கிருந்துதான் சமூகத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்க்கவும், பழகவும் கற்றுக் கொள்கிறார்கள். “பள்ளியில் எதுவெல்லாம் கற்றுத் தரப்படுகிறதோ அதுவே மிகச் சரியானது என நம்புகிறது குழந்தைகள் உலகம்” என்கிறார் எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் க.துளசிதாசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x