Published : 13 Oct 2022 06:03 AM
Last Updated : 13 Oct 2022 06:03 AM

ப்ரீமியம்
நிழற்படம் எடுக்கும் யானை

பெட்ரோ பாப்லோ சாக்ரிஸ்தான்

முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு யானை, நிழற்படம் எடுப்பவராக மாற ஆசைப்பட்டது. இதைப்பற்றி சொன்னபோதெல்லாம் அதன் விலங்கு நண்பர்கள் சிரித்தன. என்னே முட்டாள்தனம்! யானைகளுக்கென்று நிழற்படக் கருவிகள் ஏதும் இல்லை என்று சில விலங்குகள் சொன்னன. நேரத்தை வீணாக்கும் வேலை! நிழற்படம் எடுக்கும் அளவுக்கு இங்கே ஏதும் இல்லை என்று மற்றவைகள் சொல்லின.

ஆனாலும், யானை தன் கனவைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தது. எதற்குமே பயனில்லாமல் கீழே கிடந்த பொருட்களையும் சில உதிரி பாகங்களையும் சிறுகச் சிறுகச் சேகரித்து நிழற்படக் கருவி போன்ற ஒன்றை உருவாக்கியது. இந்தக் கருவியில், தம் தும்பிக்கையின் நுனியால் அழுத்துவதற்கு பொத்தான் உருவாக்குவதில் தொடங்கி, தன் கண்ணுக்குப் பொருந்துவதுபோல லென்ஸ் செய்வது, மற்றும் நிழற்படக் கருவியை வைத்து படமெடுக்க வசதியாக இரும்பாலான ஒரு சட்டகத்தை உருவாக்குவதுவரை ஏறக்குறைய எல்லாவற்றையும் யானையே வடிவமைக்க வேண்டி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x