Published : 30 Nov 2022 06:14 AM
Last Updated : 30 Nov 2022 06:14 AM

ப்ரீமியம்
சிறுகதை: வாத்து ஓட்டம்

சூ.ம.ஜெயசீலன்

குவிக் மற்றும் குவாக் என்கிற வாத்துகள் தம்அம்மாவுடன் வாழ்ந்தன. இரண்டும் தைரியமானவை. விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். உண்மையிலேயே ஒன்றை மிஞ்சி மற்றொன்று மிக வேகமாக ஓடக் கூடியவை. இரண்டும், எல்லா இடங்களிலும் போட்டி வைத்து ஓடி உள்ளன. ஒருநாள், ஆற்றுக்கு மறு கரையில் உள்ள மாமா டக்ளசைப் பார்க்கச் சென்றன. திரும்பி வருகையில், “கடைசியாக வீட்டுக்குப் போகிறவர் முட்டாள்” என குவாக் கத்தியது. எனவே, இரண்டும் மிக வேகமாக நீந்தத் தொடங்கின.

இரண்டுக்குமே நன்றாக வழி தெரியும். ஆனால், குவாக் சிறிது நேரம் செலவழித்து ஒரு தந்திரத்தை உருவாக்கியது. ஆற்றுக்கு நடுவில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், அது தனக்கு சாதகமாக இருக்கும் என்று யோசித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x