Published : 17 Nov 2022 06:16 AM
Last Updated : 17 Nov 2022 06:16 AM

ப்ரீமியம்
வெற்றி நூலகம்: பேப்பர் பூத்த மரம்

ம.பரிமளா தேவி

தென்னம் பூ வயலுன்னு ஒரு கிராமம் இருந்தது. அங்கதான் ஜீவி பாப்பா இருந்தாள். அவளுக்கு ஓவியம் வரையறுதுன்னா அவ்ளோ பிடிக்கும். பார்க்கும் பொருட்கள் அனைத்தையும் ஓவியமாக மாற்றும் திறமை அவளுக்கு இருந்தது. ஜீவிக்கு மரங்கள்னா ரொம்ப பிடிக்கும். அதனாலதான் அதிகமா மரங்களை வரைந்தாள்.

ஒரு நாள் பள்ளிக்கூடத்தில உலக சுற்றுச்சூழல் தினத்திற்காக ஓவியப்போட்டி அறிவிச்சாங்க. வீட்டுக்கு வந்ததும் ஓவியம் வரைய காகிதம் தேடுனா, வீட்டில காகிதம் இல்லை. ஓடிப்போய் அம்மாவிடம் கேட்டாள். நாட்டுல மரங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் முன்ன மாதிரி பேப்பர் கிடைக்கிறது இல்லை. கடையில் போய் சொன்னாலும் வர பத்து பதினைந்து நாள் ஆகும். பேப்பர் வாங்குற காரணம் முக்கியமானதாக இருந்தா மட்டும்தான் தருவாங்க என்றார் அம்மா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x