Published : 10 Nov 2022 06:18 AM
Last Updated : 10 Nov 2022 06:18 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள் - 17: எந்தவொரு கிரீமையும் பயன்படுத்தக் கூடாதா?

டாக்டர் சசித்ரா தாமோதரன்

எப்படியாவது வெளுப்பாகிட வேண்டும் என்கிற ஆசையில் காலை எழுந்ததும் முகம் கழுவ ஒரு கிரீம், கழுவிய முகத்துக்கு தடவிக் கொள்ள ஒரு கிரீம், குளிக்க ஒரு சோப், முகத்துக்கு வேறு ஒரு பேக், குளித்த பிறகு கை, கால் அழகைப் பாதுக்காக்க ஒரு லோஷன் என்று தினந்தோறும் நம்மில் பலர் பலவற்றை பூசுகிறோம். கிட்டத்தட்ட சிவப்பு அழகுக்காக நாம் ரசாயன அமிலங்களில்தான் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை என்று சொன்னதுடன் கடந்த வாரம் முடித்தோம்.

ஆனால், சுனிதா கேட்ட கேள்விக்கு மேலும் சில விளங்கங்களை சொல்ல வேண்டி இருக்கிறது. ஆம் சுனிதா, இந்த சிவப்பழகு கிரீம்களில் உள்ள ஹைட்ரோ-க்வினோன் எனும் ரசாயனம், ஒரு ப்ளீச்சிங் ஏஜெண்ட் போலவே செயல்படுகிறது. இதனால் உங்கள் சருமத்தின் நிறம் வெளுப்பாகும்போதே தோலில் அழற்சியையும் அது ஏற்படுத்துகிறது. இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல கிரீம்களில் காணப்படும் நிக்கல், க்ரோமியம், மெர்க்குரி ஆகிய தடைசெய்யப்பட்ட ரசாயன பொருட்களால் தோல் புற்றுநோய் வரை வரும் அபாயம் உள்ளது என்று தோல்நோய் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இத்தகைய சிவப்பழகு கிரீம்களில் பலவற்றில் உள்ள ஸ்டீராய்டுகளால் தோல் மிருதுவாகி, அதனுடன் முகப்பருக்கள், கருந்திட்டுகள், அலர்ஜி மற்றும் எளிதில் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x