Published : 17 Oct 2022 06:16 AM
Last Updated : 17 Oct 2022 06:16 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 13: காந்தி கண்ட கனவு பள்ளி

ஆர். உதயலஷ்மி

உழைப்பையும், கல்வியையும் இணைக்க வேண்டும் என்ற காந்தியின் கனவுடன், நயீ தலிம் பள்ளி மலர்ந்தது. படைப்பூக்கம் கொண்ட மனதோடு சுதந்திரமான கற்றல் முறை என்னும் தனது கனவை நயீ தலிம் பள்ளியின் மூலம் கைகோர்க்கச் செய்தார் தாகூர். எங்கே அந்த அற்புதமான பள்ளி? மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் அபய் பங், சிறுவயதில் நயீ தலிம் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றவர். பிறகு அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு, மகாராஷ்டிராவின் கட்சிரோலி எனும் ஆதிவாசிகள் வாழும் பகுதியில் மருத்துவப் பணியை செய்யத் தொடங்கினார். அபய்பங்கின் மனைவி ராணியும் மருத்துவர்.

அவர்கள் இருவரின் சேவையால், நாட்டிலேயே குழந்தை இறப்பு விகிதம் குறைந்ததொரு பகுதியாக, கட்சிரோலி பகுதி மாறியிருக்கிறது என்பதே அர்ப்பணிப்புள்ள இவர்களின் மருத்துவ பணிக்கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அமெரிக்கா சென்று படித்தவர் ஏன் பளபளக்கும் மருத்துவக் கட்டிடத்தில் பணிசெய்ய செல்லாமல், ஆதிவாசிப் பகுதிக்கு சென்றார்? நயீ தலிம் பள்ளி சமூகக் கடமையை, அர்ப்பணிப்பு உணர்வை தனக்குள் விதைத்தது என்கிறார். தன் மகன் ஆனந்தை, தான் படித்த நயீ தலிம் பள்ளியில் கல்வி கற்க சேர்க்கலாம் என்று தேடுகிறபோது, நயீ தலிம் பள்ளியைக் காணவில்லை. புத்தகத் தாள்களில் இருந்து மட்டும் கற்காமல், எவ்வாறு செயல்பாடுகளின் வழியாகக் கற்றோம், எதையும்தனியாகக் கற்காமல் சேர்ந்து எவ்வாறுகற்றோம் என்பதையெல்லாம் அசைபோட்டபடி, தான் படித்த பள்ளியை, பாடமுறையை நினைவுகூர்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x