Published : 17 Oct 2022 06:09 AM
Last Updated : 17 Oct 2022 06:09 AM

ப்ரீமியம்
கதைக்குறள் 13: வந்த வேலைய பார்க்கணும்

முனைவர் இரா.வனிதா

காட்டு வழியே வேடன் ஒருவர் சென்றபோது சுண் டெலி ஒன்று ஓடி வந்தது. அண்ணா, அண்ணா என்னையும் வேட்டைக்கு அழைத்துச் செல்லுங்கள் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்றது. வேறு வழியில்லாமல் வேடனும் சுண்டெலியை அழைத்துச் சென்றார். இருவரும் குளத்தருகே அமர்ந்து தேங்காய் கடித்து சாப்பிட்டனர். அப்போது சுண்டெலி இந்த தேங்காய் ருசியாய் இருக்கு என்றது. வேடனுக்கோ அவசரம். சுண்டெலியைப் பார்த்து வந்த வேலையைப் பார்க்க போகனும் வாயை மூடிக்கிட்டு வேகமாக வா என்று அதட்டினார். பிறகு இருவரும் காட்டிற்குள் வந்ததும். குயில் கூவும் சத்தம் கேட்டு அந்த வழியே நடந்தார்கள். ஒரு மரக் கிளையில் குயில்கள் மகிழ்ச்சியாக இருந்தன. திடீரென்று குயில்கள் ஒன்றாக கீழே இறங்கி இரையைத் தேடின. வேடன் இதுதான் சமயம் என்று வலையை விரிக்கப் போனான். அந்த சமயம் பார்த்து சுண்டெலி வேடனின் காலில் பிராண்டியது. வேடனுக்கோ சுண்டெலி மீது கோபம் வந்தது. ஓங்கி ஒரு உதை உதைத்தான். மீண்டும் வலையை விரிக்கப் போன போது குயில்கள் கூட்டமாக பறந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x