Published : 13 Oct 2022 06:10 AM
Last Updated : 13 Oct 2022 06:10 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள்-13: ரசாயனம் குறைந்த ஷாம்பூவும் கண்டீஷ்னரும் நல்லது!

டாக்டர் சசித்ரா தாமோதரன்

தலையில் சீப்பை வைத்தாலே தன் மகளுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டுவதாக பத்தாம் வகுப்பு காவியாவின் தாய் கவலை தெரிவித்து கடிதம் ஒன்றை சில வாரங்களுக்கு முன்பு எழுதியிருந்தார். முடி உதிராமல் இருக்க ஏதேனும் வழி உண்டா என்றும் அவர் கேட்டிருந்தார். அவருடைய கேள்விக்கு கடந்த கட்டுரையில் விடை கொடுக்கத் தொடங்கியிருந்தோம். முதலாவதாக நாளொன்றுக்கு 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது இயல்புதான் என்பதை விளக்கினோம். பிறகு அதீதமாக முடி உதிர்தலுக்கு நாம் தான் பொறுப்பு என்பதாகச் சொல்லி முடித்தோம். ஏன் அப்படி சொன்னேன் என்பதை இப்போது பார்க்கலாம்.

இயல்பாகவே தலையில் ஏற்படும் நோய்களான பூஞ்சைத் தொற்று (Tinea capitis), பாக்டீரியாத் தொற்று (Folliculitis), பொடுகு (Dandruff), அலர்ஜிக் டெர்மடைடிஸ், சொரியாசிஸ், லைக்கன் ப்ளானஸ் போன்ற நோய்கள் ஒருபக்கம் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் பதின்பருவத்தில் ஏற்படும் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள், பெண்களின் பிசிஓடி நீர்க்கட்டிகள் மற்றும் தைராய்டு பிரச்சினைகள் அதிக முடி உதிர்வுக்குக் காரணங்களாக இருக்கின்றன. இத்துடன் மாறிவரும் உணவு பழக்கம், மரபணுக்கள், மருந்துகள், மன அழுத்தம் ஆகிய காரணங்களும் ஒன்றுசேரும்போது சாதாரண எண்ணிக்கையை எல்லாம் தாண்டி கொத்து கொத்தாக முடி உதிர்தல் ஆரம்பிக்கிறது. இத்துடன், நமது அன்றாட அவசர வாழ்க்கைமுறை தரும் அழுத்தங்கள், நாம்பயன்படுத்தும் எண்ணெயில் இருக்கும் கலப்படங்கள், ரசாயனம் கலந்த ஷாம்பூக்கள் மற்றும் ஈரத்துடன் இறுக்கக் கட்டிய முடி, ஈரம் காய பயன்படுத்தும் ஹேர் டிரையர், ஹேர் கலரிங் தொடர்ந்து செய்தல் போன்றவை எல்லாம் சேர்ந்து முடி உதிர்தலைக் கூட்டவும் காரணமாகிவிடுகின்றன. இதுதவிர 'அலோபீசியா ஏரியேட்டா' எனும் தன்னுடல் தாக்குநோயும் பெண்களுக்கு இளம்வயதிலேயே முடி உதிர்தலை வேகப்படுத்துகிறது என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x