Published : 29 Jan 2020 09:07 AM
Last Updated : 29 Jan 2020 09:07 AM
நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க் ஆன் சீ நகரில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி சுற்று போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் அனந்த், போலந்து நாட்டைச் சேர்ந்த ஜான் - கிறிஸ்டப் டுடாவுடன் மோதினார்.
இப்போட்டி இருவருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் இந்த தொடரில் மொத்தம் 6.5 புள்ளிகளைப் பெற்றார். இந்த சாம்பியன்ஷிப்பில் அவர் 6-வது இடத்தைப் பிடித்தார்.
இந்த தொடரில் பேபியோ கருவானா மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் அப்பட்டத்தை வென்றார். நேற்று நடந்த கடைசி சுற்று ஆட்டத்தில் அவர் ரஷ்ய வீரரான வாடிஸ்லாவ் அர்டிமீவை வென்றார். இத்தொடரில் நார்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT