Published : 24 Dec 2022 06:31 PM
Last Updated : 24 Dec 2022 06:31 PM

ப்ரீமியம்
Rewind 2022 | 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா - மத்திய சுற்றுலாத் துறை செய்தது என்ன?

கோப்புப் படம்

புதுடெல்லி: சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், முதன் முறையாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் - ஓர் பார்வை:

2022 டிசம்பர் 1ம் தேதி இந்தியா ஜி-20 நாடுகளின் தலைமைப்பொறுப்பை ஏற்றது. இந்த தலைமைப்பொறுப்பு 2023ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், நாடு முழுவதும் 55 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட ஜி-20 நாடுகள் சார்ந்த கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தவிர, மத்திய சுற்றுலாத்துறையின் சார்பில் நான்கு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் உள்நாட்டு அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தியா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கார் ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகளுக்கான ஓட்டுநர்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகளில் இதுவரை இரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வெளிநாட்டினரின் மொழி, தனி நபர் சுகாதாரம், கொரோனா கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x