Last Updated : 06 Nov, 2025 04:00 PM

 

Published : 06 Nov 2025 04:00 PM
Last Updated : 06 Nov 2025 04:00 PM

கோவை குற்றாலம் செல்ல நாளை முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்த காரணத்தால் நாளை முதல் கோவை குற்றாலம் அருவிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து விட்டதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் நாளை நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சூழல் சுற்றுலா திறக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x