Published : 11 Sep 2025 07:45 AM
Last Updated : 11 Sep 2025 07:45 AM

நாட்டில் பிரபலமாகி வரும் ஆன்மிக சுற்றுலா: திருப்பதி, திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

புதுடெல்லி: ​நாட்​டில் தற்​போது ஆன்மிக சுற்​றுலா பிரபல​மாகி வருகிறது. அயோத்​தி, வாராணசி, திருப்​ப​தி, திருச்​செந்​தூர் போன்ற புண்​ணி​யத் தலங்​களுக்கு பொது​மக்​கள் படையெடுத்து வரு​கின்​றனர். நமது நாட்​டில் உள்ள புண்​ணி​யத் தலங்​களுக்கு ஆண்​டு​தோறும் சென்று கடவுள்​களை வணங்கி வரு​வதை இந்​துக்​கள் வழக்​க​மாகக் கொண்​டுள்​ளனர்.

ஆனால், கடந்த சில ஆண்​டு​களாக புண்​ணி​யத் தலங்​களுக்கு பொது​மக்​கள் செல்​வது அதி​கரித்​துள்​ளது. மதச்​சுற்​றுலா என்ற பெயரில் பொது​மக்​கள் அதிக அளவில் புண்​ணி​யத் தலங்​களுக்​குச் சென்று வரு​கின்​றனர் என்​பது புள்ளி விவரங்​களின் மூலம் தெரிய​வந்​துள்​ளது.

நாட்​டில் உள்ள பிரபல சுற்​றுலா வழி​காட்டி நிறு​வன​மான மேக் மை டிரிப் நிறு​வனம் கொடுத்​துள்ள தகவல்​களின்​படி 2024-25-ம் ஆண்​டில் வாராணசி, அயோத்​தி, திருப்​ப​தி, திருச்​செந்​தூர் உள்​ளிட்ட 56 புண்​ணி​யத் தலங்​களுக்கு சென்று வர பொது​மக்​கள் அதிகளவில் ஆர்​வம் காட்​டி​யுள்​ளனர். கடந்த 2023-24-ம் ஆண்​டைக் காட்​டிலும் இது 19 சதவீதம் அதி​க​மாகும்.

மேலும் கடந்த ஆண்​டைக் காட்​டிலும் கூடு​தலாக 15 புண்​ணி​யத் தலங்​களுக்​குச் சென்று அவர்​கள் முன்​ப​திவு செய்​துள்​ளனர். இது 25 சதவீத வளர்ச்​சி​யாக உள்​ளது. அங்​குள்ள ஓட்​டல்​கள் போன்​றவற்றை முன்​ப​திவு செய்​வ​தில் அவர்​கள் ஆர்​வம் காட்டி வருகின்றனர்.

அதே​போல ஒரு குழு​வாக சுற்​றுலா சென்று வரு​வதும் அதி​கரித்​துள்​ளது. குடும்​பம், நண்​பர்​கள் குழு அல்​லது கம்​யூனிட்டி குழு என்ற பெயரில் குழுக்​களாக பொது மக்​கள் மதச் சுற்​றுலா​வுக்​குச் செல்​வதும் அதி​கரித்​துள்​ளது.

முன்​ப​திவு செய்​யப்​படும் சுற்​றுலாக்​களில் 47 சதவீதம் பேர் குழுக்​களாகச் சென்று வரு​வதும் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. அதே​போல் ஓட்​டலில் ஒரு​நாள் வாடகை ரூ.7 ஆயிரத்​துக்​கும் அதி​க​மாக உள்​ளவற்றை பொது​மக்​கள் முன்​ப​திவு செய்​வது 20 சதவீதம் அதி​கரித்​துள்​ளது.

மேக் மை டிரிப் நிறு​வனத்​தின் இணை நிறு​வனரும், குழு தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான ராஜேஷ் மேகவ் கூறும்​போது, “நமது நாட்​டில் புனிதப் பயணம் எப்​போதுமே கலாச்​சா​ரத்​தின் ஒரு பகு​தி​யாக இருந்து வரு​கிறது. ஆனால், தற்​போது இந்​தியா முழு​வதும் புனிதப் பயணம் செல்​வோர் அதி​கரித்து வரு​வதை நாம் காண முடிகிறது.

இவ்​வாறு புனிதப் பயணம் மேற்​கொள்​ளும் சுற்​றுலாப் பயணி​களுக்​காக புது​மை​களை உரு​வாக்​க​வும் நாம் முற்​படு​கிறோம்’’ என்​றார். அயோத்​தி, வாராணசி, திருப்​பதி போன்ற புண்​ணி​யத் தலங்​கள் மட்​டுமல்​லாமல் பிர​யாக்​ராஜ், புரி, அமிர்​தசரஸ், கதுஷி​யாம் ஜி, ஓம்​காரேஸ்​வர், திருச்​செந்​தூர் உள்​ளிட்ட புண்​ணி​யத் தலங்​களுக்​கு செல்​லும்​ பக்​தர்​களும்​ அதி​கரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x