Published : 04 Sep 2025 06:52 AM
Last Updated : 04 Sep 2025 06:52 AM
ராமேசுவரம்: இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின்போது உடன் சென்ற அந்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அதிபரின் கச்சத்தீவு பயணம் குறித்து யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவு வரை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி விரைவி்ல் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT