Published : 15 Aug 2025 06:01 AM
Last Updated : 15 Aug 2025 06:01 AM

மாமல்லபுரம் | சர்வதேச காற்றாடி திருவிழா தொடக்கம்

தமிழக சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் சர்வதேச பட்டம் விடும் விழாவை அமைச்சர்கள் தாமோ.அன்பரசன், ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாமல்லபுரம்: ​மாமல்​லபுரத்தை அடுத்த திரு​விடந்தை கடற்​கரைப் பகு​தி​யில் சர்​வ​தேச காற்​றாடி திரு​விழா தொடங்​கியது. இந்த திரு​விழாவை அமைச்​சர்​கள் ராஜேந்​திரன், தா.மோ. அன்​பரசன் ஆகியோர் தொடங்கி வைத்​தனர். தமிழ்​நாடு சுற்​றுலாத் துறை மற்​றும் குளோபல் மீடியா பாக்ஸ் ஆகியவை இணைந்​து, 4-வது முறை​யாக நடத்​தும் சர்​வ​தேச காற்​றாடி திரு​விழா நேற்று மாமல்​லபுரத்தை அடுத்த திரு​விடந்​தை​யில் தொடங்​கியது. இத்திருவிழா 4 நாட்​களுக்கு நடக்​கிறது.

இதில், மலேசி​யா, தாய்​லாந்​து, சுவிட்​சர்​லாந்​து, வியட்​நாம் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களில் இருந்​தும், இந்​தி​யா​வில் உள்ள பல்​வேறு நகரங்​களில் காற்​றாடி பறக்க விடு​வ​தில் கைதேர்ந்த வீரர்​கள், வீராங்​க​னை​கள் என 40-க்​கும் மேற்​பட்​டோர் 10 அணி​களாக பிரிந்து காற்​றாடிகளை பறக்க விட்​டனர்.

இதில், அமைச்​சர்​கள் ராஜேந்​திரன், தா.மோ. அன்​பரசன் ஆகியோர் பங்​கேற்று காற்​றாடிகளை பறக்க விட்டு தொடங்கி வைத்​தனர். முதல் நாளான நேற்று வானில் பறந்த காற்​றாடிகளை சுற்​றுலாப் பயணி​கள் தங்​களது செல்​போனில் புகைப்​படம் எடுத்து மகிழ்ந்​தனர்.

இத்திருவிழா தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடக்க உள்​ளது. இதில், ஆட்​சி​யர் சினே​கா, எம்​எல்​ஏக்​கள் பாலாஜி, வரலட்​சுமி, திருப்​போரூர் வட்​டாட்​சி​யர் சரவணன், தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்சி கழக பொது மேலா​ளர் கவி​தா, மண்டல மேலா​ளர் வெங்​கடேசன், மாமல்​லபுரம் சுற்​றுலா அலு​வலர் சக்​திவேல், தமிழ்​நாடு ஓட்​டல் மேலா​ளர்​ அன்​பு உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x