Published : 03 Aug 2025 07:01 AM
Last Updated : 03 Aug 2025 07:01 AM

கொல்லிமலையில் ‘வல்வில் ஓரி’ விழா கோலாகல தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர்க் கண்காட்சி

நாமக்கல்: ​கொல்​லிமலை​யில் வல்​வில் ஓரி விழா நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. இதையொட்டி அமைக்​கப்​பட்​டிருந்த மலர்க் கண்​காட்​சி​யைச் சுற்​றுலாப் பயணி​கள் கண்டு ரசித்​தனர்.

கடையேழு வள்​ளல்​களில் ஒரு ​வ​ரான வல்​வில் ஓரி மன்​னனை சிறப்​பிக்​கும் வகை​யில் கொல்​லிமலை​யில் ஆண்​டு​தோறும் ஆடிப்​பெருக்​கின்​போது வல்​வில் ஓரி விழா கொண்​டாடப்​படு​கிறது. நடப்​பாண்டு விழா நேற்று காலை தொடங்​கியது. எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி, கோட்​டாட்​சி​யர் வே.​சாந்தி தலைமை வகித்​து, வல்​வில் ஓரி படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

இதையொட்​டி, அங்​குள்ள பூங்​கா​வில் மலர்க் கண்​காட்சி நடை​பெற்​றது. குழந்​தைகளைக் கவரும் வகை​யில் வண்ண ரோஜா மலர்​களால் கண்​ணாடி மாளிகை அமைக்​கப்​பட்​டிருந்​தது. மேலும், ரோஜா மலர்​களால் குதிரை, மான், காதல் சின்​னம், காய்​கறிகளால் கரடி, பறவை உரு​வங்​கள், தானி​யங்​களால் கால்​நடை உரு​வங்​கள், பழங்​களால் முதல்​வர் உரு​வம் ஆகியவை அமைக்​கப்​பட்​டுஇருந்தன.

மலர்க் கண்​காட்​சி​யில் ரோஜா, ஜெர்ப​ரா, கார்​னேஷன், ஆந்​தூரி​யம், ஜிப்​சோபில்​லம், சாமந்​தி, ஆர்​கிட், லில்​லி​யம், ஹெலிகோனி​யம், சொர்க்​கப்​பறவை, கிளாடியோஸ், டெய்​ஸி, சம்​பங்​கிப்பூ உள்​ளிட்ட 20 வகை​யான மலர்​கள் இடம் பெற்​றிருந்​தன. மூலிகைப் பயிர்​கள், அவற்​றின் மருத்​து​வக் குறிப்​பு​களு​டன் இடம்​பெற்​றிருந்​தன. இவை சுற்​றுலாப் பயணி​களை வெகு​வாக கவர்ந்​தன.

மேலும், செம்​மேட்​டில் உள்ள கலை​யரங்​கில் இசை நிகழ்ச்​சி, பள்ளி மாணவ, மாணவி​களின் கிராமிய நடனம் உள்​ளிட்ட பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. இன்று (ஆக. 3) நலத்​திட்ட உதவி​கள் வழங்​குதல் மற்​றும் போட்​டிகளில் வெற்றி பெற்​றவர்​களுக்​குப் பரிசளிப்​பு விழா நடக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x