Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் புதிதாக 772 பேருக்கு கரோனா :

சென்னை

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 461,பெண்கள் 311 என மொத்தம் 772 பேர்கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 120, கோவையில் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 18,750 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 73,448 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 884 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 8,953 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,349 ஆகஉயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x