Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

டெல்டாவில் மழை: மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு :

சேலம்

டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் காவிரியில் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. மழையால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

இதனால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று மதியம் 2 மணிமுதல் விநாடிக்கு 1,000 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர்திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அணைக்குநேற்று முன்தினம் விநாடிக்கு12,308 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 12,118 கனஅடியானது. அணை நீர் மட்டம் நேற்று75.63 அடியாகவும், நீர் இருப்பு 37.74 டிஎம்சியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x