Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

மதுரை: மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 2010-ம் ஆண்டில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் எஸ்.பி.எஸ்.பெருமாள் பாண்டியன். இவர் மதுரையைச் சேர்ந்த அரசு மருத்துவர் அசோக்குமார் மீதான வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவித்த வழக்கில் அவருக்குச் சாதகமாக முடிக்க நமச்சிவாயம் என்பவர் மூலம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் பெற்றார். இதையடுத்து பெருமாள்பாண்டியன், நமச்சிவாயம் ஆகியோரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்

இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் பெருமாள்பாண்டியனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், நமச்சிவாயத்துக்கு 2 மாதம் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வடிவேலு தீர்ப்பளித்தார்.சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆய்வாளர் பெருமாள்பாண்டியன் பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x