Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM
மழையால் வீடுகள் பகுதிச் சேதமடைந்த 59 பேருக்கு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிவர், புரெவி புயல் பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவிடம் முதல்வர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் பயிர் சேதாரம் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும். 5 புயல்கள் வருவதாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மத்திய பேரிடர் நிதியை எதிர்பார்க்காமல் மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT