Published : 27 Oct 2021 03:11 AM
Last Updated : 27 Oct 2021 03:11 AM

ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு :

அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை ஊழல் ஒழிப்பு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதை யொட்டி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமாரதாஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி, அலுவலக மேலாளர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் டி.பி.சுரேஷ்குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர், உதவி ஆணை யாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உறுதிமொழி ஏற்றனர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி கலிவரதன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x