Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

நெல்லையில் இரவிலும் நீடித்த வாக்குப்பதிவு :

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 621 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் திட்டமிட்ட நேரத்துக்குள் வாக்குப்பதிவு நிறைவடையவில்லை. இரவு 8 மணிக்குமேலும் வாக்குப்பதிவு பல்வேறு வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது. இரவு 8 மணி நிலவரப்படி 584 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்திருந்தது. 37 வாக்குச் சாவடிகளில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x