Published : 07 Aug 2021 03:19 AM
Last Updated : 07 Aug 2021 03:19 AM
ஈரோடு அஞ்சல் கோட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 16-ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு அஞ்சல் கோட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்,முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 16-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி வரும் 11-ம் தேதிக்குள், ‘முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர்’ ஈரோடு - 638001’என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உறையின் மேல்பகுதியில், குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட வேண்டும். முழு விவரத்துடன் எழுதப்பட்ட புகார் மனுக்களை நேரிலும் வழங்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT