Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

சேலம் வணிக நிறுவனங்களில்மாநகராட்சி ஆணையர் ஆய்வு :

கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வழங்கினார். உடன் மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முக வடிவேல்.

சேலம்

கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சேலம் தற்காலிக பேருந்து நிலைய வளாகம், சாலையோரக் கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகளில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கரோனாவில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் முகக் கவசத்தை பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

தொடர்ந்து, சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் தெருவில் உள்ள ஜவுளிக் கடைகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முக வடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x