Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM
நாகர்கோவில்/ திருநெல்வேலி/ கோவில்பட்டி/ தூத்துக்குடி
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராககையெழுத்து இயக்கத்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநகரத் தலைவர் அலெக்ஸ், மாநிலபொதுச்செயலாளர் பினுலால் சிங், நிர்வாகிகள் வைகுண்டதாஸ், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் வண்ணார் பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டகாங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன்தலைமை வகித்தார்.முன்னாள் மத்திய இணை அமைச்சர் தனுஷ் கோடி ஆதித்தன் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற 2 தொண்டர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர். கட்சி நிர்வாகிகள் ராஜேஷ்முருகன், வான மாமலை, சொக்கலிங்ககுமார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் விலக்கில் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில்நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர் தொடங்கி வைத்தார்.வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராஜா,மாவட்ட துணைத் தலைவர் வீரப்பெருமாள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கயத்தாறில் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்சி.எஸ்.முரளிதரன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.பி.சுடலையாண்டி, எஸ்.டேனியல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் தலைமைவகித்தார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT