Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM
சிதம்பரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜிக்கு ரகசியதகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய் வாளர் ஆறுமுகம், உதவி காவல்ஆய்வாளர் சுரேஷ் முருகன், தனிப்படை உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் போலீஸார் நேற்று சிதம்பரம் பள்ளிப்படை சுடுகாட்டு பகுதியில் கண் காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப் போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 5 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், ஆதிவராகநத்தம் அருண்குமார் (29), அண்ணாமலை நகர் ரயில்வே கேட் இரக்கம் சபரிவாசன் (22), சென்னை அச்சரப்பாக்கம் சையது உசேன் (25), மேல் புவனகிரி பகுதி சூர்யா (21), அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (29) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சிதம்பரம் நகரப் பகுதியில் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்கிற யோகேஸ்வரன் (25), வெங்கடேசன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT